Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடவடிக்கைகளுக்குப் பின்னும் திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:48 IST)
திருச்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று. ஆனால் இப்போது அங்கே பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அதிலும் திருச்சி மாநகராட்சியிலே பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட 4146 பேரில் 2556 பேர் திருச்சி மாநகராட்சியை சேர்ந்தவர்கள். அதே போல பலி எண்ணிக்கையில் 38 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்தில் இறந்தவர்கள் 60 பேர்.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டாலும், இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. மொத்தம் 12 இடங்களாக இருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இப்போது 25 ஆகியுள்ளன. இது திருச்சி வாழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments