Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலியை அடகு வைத்து டி வி வாங்கிய பெண் – எல்லாம் எதற்காக தெரியுமா?

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:39 IST)
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக தாலியை அடமானம் வைத்து தொலைக்காட்சி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்திவருகின்றன பள்ளிகள். அரசுப் பள்ளிகளோ கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அதன் மூலமாக பாடங்களை ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவுக்காக தாலியை அடமானம் வைத்து அதில் தொலைக்காட்சி வாங்கியுள்ளார்.  இந்த சம்பவமானது ஊடகங்களில் வெளியாகி பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள கஸ்தூரி ‘ஊரடங்கு காரணமாக எனக்கும் என் கணவருக்கும் வேலை இல்லை என்பதால் வருமானமே இல்லை. அதனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments