Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல்!? – பயணிகள் வெளியேற்றம்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:37 IST)
திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்ததால் பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் நடந்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததால் நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் பலத்த பாதுகாப்பில் உள்ளன.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் குண்டு வைத்திருப்பதாக வந்த மர்ம போன் கால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றி வெடிக்குண்டு சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் குண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments