Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல் எதிரொலி.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (11:15 IST)
வங்ககடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments