Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூடு எதிரொலி.. தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்..!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:21 IST)
துப்பாக்கி சூடு எதிரொலி.. தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்..!
கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக பாலாறு வழியாக தமிழக கர்நாடகம் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு பரிசல்களில் சென்றவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்
 
இந்த துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த  மீனவர் ராஜா என்பவர் காணாமல் போனதாகவும் அதன் பிறகு அவரது உடல் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இரு மாநில எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை அடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கர்நாடகா எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!

மாலத்தீவின் உலக அளவிலான தூதராகிய பாலிவுட் நடிகை.. சில மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையே வேறு..!

பிரபலங்களை மிரட்டி பணம் பறித்த டிவி செய்தி தொகுப்பாளர்கள்.. பெண் உள்பட இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments