Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:16 IST)
திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 
 
மகா சிவராத்திரி முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி விடுமுறை என திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மழை காரணமாக தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஆனால் நாளைய சனிக்கிழமை மட்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments