Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவாகம் திருவிழா ; தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் – திருநங்கைகள் கோரிக்கை !

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (16:27 IST)
கூவாகத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிதளில் திருநங்கைகளின் திருவிழா நடக்க இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திருநங்கைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஏப்ரல் 18 முதல் மே 21 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. ஏற்கனவே மதுரை சித்திரைத் திருவிழாவைக் காரணம் காட்டி மதுரை மக்கள் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது திருநங்கைகளும் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுசம்மந்தமாக  மதுரையைச் சேர்ந்த திருநங்கைகள் செயற்பாட்டாளர் பாரதி கண்ணம்மா கூறியுள்ளதாவது ‘ஏப்ரல் 15 முதல் 17 வரை விழுப்புரத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் 6.5 லட்சம் திருநங்கைகள் பங்கேற்பார்கள். அவர்களால் மறுநாளே அவரவர் ஊருக்கு திரும்பி இயலாது. தேதியை மாற்றாவிட்டால் திருநங்கை சமூகத்தை புறக்கணித்ததாக ஆகிவிடும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

திருநங்கை பாரதி கண்ணம்மா 2014 மக்களவை தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்டார். மேலும் சமத்துவ மக்கள் கட்சியிலும் சிலகாலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments