Publish Date: Wed, 10 Nov 2021 (19:00 IST)
Updated Date: Wed, 10 Nov 2021 (19:02 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து அதிக அளவில் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ரயில்களின் அட்டவணை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
மேலும் ரயில்கள் கிளம்பும் நேரம் மற்றும் ரயில்கள் சென்னைக்கு வரும் நேரம் குறித்த சந்தேகங்களை கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
பயணிகள் மற்றும் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டு ரயில்கள் வரும் நேரத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அந்த எண்கள் பின்வருமாறு:
1. 044-25330952
2. 044-25330953