Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவிற்கு என்ன நோய்?: வழக்கு போட்டு விசாரிக்கும் டிராபிக் ராமசாமி

ஜெயலலிதாவிற்கு என்ன நோய்?: வழக்கு போட்டு விசாரிக்கும் டிராபிக் ராமசாமி
, திங்கள், 3 அக்டோபர் 2016 (15:32 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
அவர் நலமுடன் இருப்பதாக அவ்வப்போது, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. அவருக்கு சுவாச பிரச்சனை இருப்பதாகவும், இதனால் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தற்போது மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
 
ஒருபக்கம், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிமுகவினர் மறுத்தாலும், முதல்வரின் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை.
 
இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பதட்டமான, பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் தமிழக அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
 
இதனிடையே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மையான அறிக்கை வெளியிட கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். 
 
அந்த மனுவில், ”முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
 
அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி அறையில் வைத்து முதலமைச்சர் ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
 
முதலமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவுவதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூருக்கும், வெளியிலும் செல்ல முடியாமல் பலர் தவிக்கின்றனர். முதலமைச்சரின் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளால் பொது அமைதிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
 
மேலும், ”பொதுமக்களின் நலன் கருதி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
 
முதலமைச்சர் மருத்துவமனையில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் லண்டன் போகும் காரணத்தை திமுக கூறட்டும்: அதிமுக தடாலடி!