Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குற்றாலத்தில் குளிக்க தடை..!

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குற்றாலத்தில் குளிக்க தடை..!
, வியாழன், 2 நவம்பர் 2023 (07:40 IST)
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து குற்றாலத்தில் குளிக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவில் ஓடுபாதையிலேயே விமானத்தை சுற்றி வளைத்த கும்பல் - உள்ளே இருந்தது யார்?