Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை.. குளிர்காற்று அடிப்பதால் மக்கள் மகிழ்ச்சி..!

சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை.. குளிர்காற்று அடிப்பதால் மக்கள் மகிழ்ச்சி..!
, புதன், 1 நவம்பர் 2023 (16:55 IST)
சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், கிண்டி, அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் கடந்த சில மணி நேரங்களாக குளிர்ந்த காற்று வீசுவதால் சென்னை நகரமே ஊட்டி கொடைக்கானல் போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து இன்னும் சில நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடைபெற எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்  

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களா? நீதிமன்றம் கேள்வி