Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம்.. கிரிவலம் செல்ல சரியான நேரம் என்ன?

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:53 IST)
திருவண்ணாமலையில் நாளை ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
நாளை அதிகாலை 3. 26 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 1.05 மணி வரை கிரிவலம் செல்ல சரியான நேரம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
மேலும் கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments