Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

holiday
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:30 IST)
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன 
 
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது மிக வேகமாக காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!