Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு..!

Advertiesment
School

Siva

, ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:54 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், முதல் நாளே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
கோடை விடுமுறை மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிந்து ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் பராமரிப்பு, பள்ளி வாகனங்கள் சோதனை உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்க தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும் வரும் கல்வி ஆண்டுக்கான அதாவது 2024-25ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விகே பாண்டியனின் ஐஏஎஸ் மனைவி விடுப்பில் சென்றார்.. 6 மாத காலம் விடுமுறையா?