Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Advertiesment
Holiday
, வியாழன், 20 ஜூலை 2023 (17:00 IST)
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் உள்ளூர் பண்டிகை காரணமாக மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக உள்ளது 
 
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு நாளை அதாவது ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பணிநாளாக  கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திராயன்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது: இஸ்ரோ ட்வீட்