Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

chennai
, புதன், 6 டிசம்பர் 2023 (14:26 IST)
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது.  இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

சென்னையில் காரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை  பாதுகாப்பு படை வீரர்கள், போலீஸார் படகுகள் மூலம் பத்திரமீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதிக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு விமானப் படையின் ஹெலிகாப்டர்  மூலம் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மழை வெள்ளம் எப்போது வடியும் என்று கூற முடியாத நிலையில்,   சென்னையில் நாளையும் (டிசம்பர் 7 ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும்  அரையாண்டுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாவட்டங்களில் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!