Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

22 ஆயிரமாக குறைந்தது கொரோனா பாதிப்பு!

22 ஆயிரமாக குறைந்தது கொரோனா பாதிப்பு!
, ஞாயிறு, 30 ஜனவரி 2022 (20:05 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 23 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்தது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,238 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26,624 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,998 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,25,940 , இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,952 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: கேரள மக்கள் அதிர்ச்சி