Publish Date: Tue, 28 Jun 2022 (10:33 IST)
Updated Date: Tue, 28 Jun 2022 (10:37 IST)
நேற்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று 2-வது நாளில் மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது
பங்கு சந்தை இன்று காலை தொடங்கியதிலிருந்தே இறக்கத்தில் உள்ளது என்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்து 52 ஆயிரத்து 850 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் தேசிய பங்கு சந்தை சுமார் 100 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 740 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தை நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் பரமபத விளையாட்டு போல் இருப்பதால் முதலீட்டாளர்கள் திக்திக் என உள்ளனர்