Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றுடன் முடிகிறது நீதிமன்ற காவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?

இன்றுடன் முடிகிறது நீதிமன்ற காவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?
, புதன், 28 ஜூன் 2023 (09:12 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சட்ட விரோதமாக பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார் 
 
கடந்த 14ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் அவகாசம் முடிவடைகிறது. இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் நீடிக்கப்படுமா? அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது குறித்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரியவரும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி, அமித்ஷாவை ட்ரோல் செய்து அனிமேஷன் வீடியோ! – காங்கிரஸ் வீடியோவால் பரபரப்பு!