Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை வாதத்தை இருட்டடிப்பு செய்யும் முன்னணி ஊடகங்கள்..!

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை வாதத்தை இருட்டடிப்பு செய்யும் முன்னணி ஊடகங்கள்..!
, செவ்வாய், 27 ஜூன் 2023 (16:23 IST)
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்து வரும் நிலையில் அவரது வாதம் குறித்த செய்திகளை முன்னணி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதாக கூறப்படுகிறது. 
 
செந்தில் பாலாஜி வழக்கில் அவரது மனைவி மேகலா தரப்பில் வாதிட்ட என்.ஆர். இளங்கோ அவர்களின் வாதத்தை வரிக்கு வரி அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. 
 
ஆனால் அதே நேரத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்டு வரும் துஷார் மேத்தாவின் கருத்துக்களை பெரிய ஊடகங்கள் பெட்டி செய்தியாக கூட வெளியிடவில்லை என்று பொதுமக்கள் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 
 
இதிலிருந்து ஊடகங்கள் ஒரு சார்பாக இருப்பது தெரியவந்துள்ளது என்றும் ஊடகங்கள் நடுநிலை உடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். 
 
அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் என்ன வாதம் செய்தார் என்பதே தெரிந்து கொள்ள முடியாதபடி மக்களுக்கு முன்னணி ஊடகங்கள் செய்தியை மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியை விசாரிக்க முடியவில்லை: சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்..!