Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடித்து வெளுக்கும் கனமழை..! – எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

அடித்து வெளுக்கும் கனமழை..! – எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?
, திங்கள், 10 அக்டோபர் 2022 (07:50 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலையில் இருந்தே மழை தொடர்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடியற்காலை முதலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதுபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு, பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

62.66 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!