Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:10 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதேபோல் நாளை முதல் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி, சேலம், ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments