Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
, வெள்ளி, 23 ஜூன் 2023 (09:05 IST)
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது என்பதும் இதனால் குளிர்ச்சியான தட்பவெட்பம் நகரம் முழுவதும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் ‘நாட்டு நாட்டு’, இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’: பிரதமர் மோடியின் கலகல பேச்சு..!