Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 23 மே 2024 (17:21 IST)
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் வரும் 25ஆம் தேதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சற்று முன் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதாவது தமிழகத்தின் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, சேலத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யும் என்றும்,  ராமநாதபுரம், சிவகங்கை, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments