Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கிருந்தாலும் உடனே நாடு திரும்ப வேண்டும்.. பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை

Mahendran
வியாழன், 23 மே 2024 (17:16 IST)
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகியுள்ள பிரஜ்வால்  ரேவண்ணாவுக்கு,  அவருடைய தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அந்த எச்சரிக்கையில் அவர் கூறியபோது, ‘சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமென்றும் பேரனுக்கு தேவகவுடா அறிவுறுத்தல் அறிவுறுத்தியுள்ளார்.
 
தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவகவுடா, பிரஜ்வால் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் எனவும் தேவகவுடா காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார்கள், எல்லாம் என் கவனத்திற்கு வந்தது என கூறிய தேவகவுடா, பொறுமைக்கும் எல்லை உண்டு என பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments