Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
Chennai Rain

Siva

, வியாழன், 23 மே 2024 (06:38 IST)
வங்க கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு தோன்றியது என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்த நிலையில் இன்று அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதாக கூறியிருப்பதை அடுத்து ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் மத்திய வங்க கடல் பகுதியில் நிலவி வங்கதேசத்தை நோக்கி செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் 25ஆம் தேதி புயலாக மாறுமா என்பது தெரியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!