Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Advertiesment
rain
, ஞாயிறு, 29 மே 2022 (13:59 IST)
கேரளாவில் முன்கூட்டியே பருவமழை தொடங்கி விட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, குமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை
ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும், 
 
அதேபோல் நாளை முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யும் 
 
சென்னையை பொருத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

22 பேருடன் புறப்பட்ட விமானம் மாயம்! – நேபாளத்தில் பரபரப்பு!