Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது நாளாக 75 காசுகள் உயர்ந்த பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

2வது நாளாக 75 காசுகள் உயர்ந்த பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்
, புதன், 23 மார்ச் 2022 (07:05 IST)
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயராமல் இருந்த நிலையில் நேற்று திடீரென எழுபத்தி ஆறு காசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. சற்றுமுன் வெளியான  தகவலின்படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து இன்று சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.91 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் விலை ரூபாய் 92.95 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் இனி எத்தனை நாளைக்கு உயரும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

47.40 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!