Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அத்திவரதர், உள்ளூர் மக்களுக்கு காட்சி அளிக்கமாட்டார்..காரணம் என்ன?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (14:17 IST)
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சித் தரும் அத்திவரதர், கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சித் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17 நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை லட்சக்கணக்கன பக்தர்கள் அத்திவரதரை காண குவிந்தனர். இந்நிலையில் கூட்டத்தை கட்டுபடுத்தவும் கூட்ட நெரிசலில் சிக்கி அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் பக்தர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் யாரும் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சமீபத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 80 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயக்கமடைந்ததால், சிகிச்சை எடுத்து வருவதாக ஒரு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments