Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருமா சிறைவாசம்? இன்று வெளியாகிறது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு..!

Siva
வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:30 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர், உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை சில மாதங்கள் கடந்தது.

இதை அடுத்து, இரு தரப்பினரும் வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் இன்று தீர்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சிறைவாசம் முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை” - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments