Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருமா சிறைவாசம்? இன்று வெளியாகிறது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு..!

Siva
வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:30 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர், உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை சில மாதங்கள் கடந்தது.

இதை அடுத்து, இரு தரப்பினரும் வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் இன்று தீர்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சிறைவாசம் முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாடு: 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments