Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியபாண்டியனுக்கு அஞ்சலி: அடகு மற்றும் நகைக்கடைகள் இன்று மூடல்

பெரியபாண்டியனுக்கு அஞ்சலி: அடகு மற்றும் நகைக்கடைகள் இன்று மூடல்
, வியாழன், 14 டிசம்பர் 2017 (09:00 IST)
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்துகிறார்

பின்னர் விமானம் மூலம் மதுரைக்கும் அங்கிருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கும் பெரியபாண்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் அடகு மற்றும் நகைக்கடைகள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் தேர்தல்: 2 வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது