Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி!

அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி!
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (08:07 IST)
தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது
 
தமிழகத்திலுள்ள 143 அரசு கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக பதிவாகி வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதியே விண்ணப்பம் செய்ய கடைசி தேதி என உயர்கல்வித் துறை அறிவித்து இருந்தது என்பதை அடுத்து இன்று கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரசு கலைக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள்  www.tngasa.org, www.tngasa.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். எஸ்சி எஸ்டி மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 48 மற்றும் பதிவு கட்டணம் இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பங்களை ஆரம்பமான நிலையில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்!