Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ரூ.468 உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்!

ஒரே நாளில் ரூ.468 உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:41 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 56 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4392.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 468 உயர்ந்து ரூபாய் 35136.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4756.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38048.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 63.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய நபர்: மெசேஜ் அனுப்பி காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!