Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!

Siva
புதன், 20 மார்ச் 2024 (07:20 IST)
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று முதல் அதாவது மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் இதனை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து பணிகளும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி உள்பட அனைத்து கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் இன்னும் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பதால் இன்னும் ஒரு நாளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments