Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய பலி விவகாரம்.. கள்ளக்குறிச்சி விரைகிறார் ஈபிஎஸ்..!

Siva
வியாழன், 20 ஜூன் 2024 (08:55 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் திமுக அரசை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக இந்த விவகாரத்தை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கள்ளக்குறிச்சி விரைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் பலியானவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments