தங்கம் வாங்கியே ஆகணும்.. குவியும் மக்கள்! – நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (08:53 IST)
இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்பதால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை நேரமே திறக்கப்பட்டு விட்டன. மேலும் நகை விற்பனையை அதிகரிக்க செய்கூலி, சேதாரம் இல்லை போன்ற அறிவிப்புகளையும் பல நகைக்கடைகள் அறிவித்து வருகின்றன.

பல கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களாகவே பலர் வந்து நகைகளை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments