Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியது – இன்று இரவே கரையை நெருங்கும்!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:15 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை – ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments