Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடை மேல் தொட்டாலும் அது வன்கொடுமைதான்! போக்சோதான்! – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:03 IST)
ஆடை மேல் தொட்டு செய்யும் பாலியல் சீண்டல்கள் போக்சோவில் வராது என்ற மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்கள் முன்னதாக மும்பை உயர்நீதிமன்றம் இளம்பெண்கள், சிறுமிகள் மீது ஆடைமேல் தொட்டு செய்யும் பாலியல் சீண்டல்களுக்கு போக்சோ சட்டத்தில் வழக்கு தொடர முடியாது என உத்தரவிட்டிருந்தது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையில் இன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆடைமேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும் அதுவும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என கூறி மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்