Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி: தமிழகம் சாதனை!

இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி: தமிழகம் சாதனை!
, திங்கள், 3 ஜனவரி 2022 (19:07 IST)
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2.34 லட்சம் தடுப்பூசி சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று காலை முதலே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆரம்பித்துவைத்த சிறார்களுக்கான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக செலுத்தப்பட்டது என்பதும் இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் மட்டும் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 310 சிறார்களுக்கும் குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1886 சிறார்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. சென்னையில் 4670 சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞர் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சோதனை: நீதிமன்றத்தில் வழக்கு!