Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய ரூ. 200 வசூலிப்பதாக நகர காவல் நிலையத்தில் பெண் புகார்..

J.Durai
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:58 IST)
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இரவு சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயசீலா (39), புகார் மனு கொடுத்தார். 
 
அந்த மனுவில் நேற்று மாலை  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாகவும். அப்போது அங்கு இருந்த சில பக்தர்களிடம் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய ரூ.200 அங்கிருந்து தீட்சிதர்கள்  சிலர் பக்தர்களிடம் வசூலித்ததாக  கூறப்படுகிறது.
 
இதை தீட்சிதர்களிடம் ஜெயசீலா ஏன் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு ரூபாய் 200 வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, ஜெயசீலாவை அங்கிருந்த தீட்சிதர்கள் சிலர் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் அங்கு ஜெயசீலாவிற்கும் கோவில் தீட்சர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments