Publish Date: Tue, 20 Sep 2022 (14:55 IST)
Updated Date: Tue, 20 Sep 2022 (14:57 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ஆம் தேதி அதாவது நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது
செப்டம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள நபர்கள் உடனடியாக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பிரிவில் தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 161 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது