Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 22ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதியா?

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (19:26 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை நாடு முழுவதும் திறக்கலாம் என மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது 
 
ஆனால் அதே நேரத்தில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஒவ்வொரு திரையரங்கின் முன் சானிடைசர் வைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் தமிழக அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து தமிழக அரசிடமிருந்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
திரையரங்குகள் திறந்தவுடன் திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வருவதைப் பொறுத்து மாஸ்டர் உள்பட பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும் அதுவரை சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments