Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தலைமை செயலக ஊழியர்கள்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (22:19 IST)
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் இந்த அமைப்பினர் பின்வாங்கவில்லை



 
 
இந்த நிலையில் போராட்டம் செய்பவர்களுக்கு சம்பளம் இல்லை என்றும், போராட்டம் நீடித்தால் மாற்று ஊழியர்கள் எடுக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தலைமை செயலக சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் தவிர 4,500 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலைநிறுத்தம் இன்னும் சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments