Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் கடுமையான ஊரடங்கா? தமிழக அமைச்சகம் கூறுவது என்ன?

மீண்டும் கடுமையான ஊரடங்கா? தமிழக அமைச்சகம் கூறுவது என்ன?
, வியாழன், 11 ஜூன் 2020 (17:31 IST)
மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா என தமிழக அமைச்சர் பதில் அளித்துள்ளனர். 
 
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாகி வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த முறை சென்னையில் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. 
 
ஆனால் இந்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சென்னையில் முழு ஊரடங்கு என்பது சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்றும் அரசுத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
 
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது, மீண்டும் கடுமையான ஊரடங்கா? என மருத்துவ குழுவின் ஆலோசனையின் படி முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். 
 
இதேபோல அமைச்சர் ஜெயகுமாரும், பொதுமுடக்கம் நீட்டிப்பு என்பது முதல்வர், அமைச்சரவை எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டரில் அறிமுகம் ஆகவுள்ள புதிய வசதி...