Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு முக்கிய தகவல்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:51 IST)
கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை அரசு நிதி பெறும் பள்ளிகளிலும் நீடிக்க திட்டமிட்டு இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு கொண்டு வந்தால் அந்த பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதனை அடுத்து தமிழக அரசு இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை  அரசு பள்ளிகள் மட்டுமல்லாது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது.

இந்த பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments