Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

karur
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (20:45 IST)
கரூரில் 8 - வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய  வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ள கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 
கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும் கட்டடத் தொழில் முருகேசன். இவருக்கு திருமணம் ஆகவில்லை.  இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுவனிடம் செல்போனில் விளையாட்டு மொம்மை படம் காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
இது தொடர்பாக கடந்த 20- 03- 22- ஆம் தேதி முருகேசன் கைது செய்யப்பட்டார்.   கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கினார்.
 
குற்றவாளி முருகேசனுக்கு  20 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்தும் ரூ. 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
மேலும்,  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை: துயரத்தில் பங்கெடுக்கிறேன்.- சீமான்