Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஸ்ட்டை ஒழுங்கா பாருங்க ஸ்டாலின்! தமிழக அரசு விளக்கம்!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (08:21 IST)
பெரியார் விருது வழங்கபடாததை கண்டித்து முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஏற்கனவே விருது பெறுபவர்கள் குறித்து அறிவித்துள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் கபிலர் விருது, கம்பர் விருது, அம்மா இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகள் இலக்கியத்தில், சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சமூக நீதிக்கான பெரியார் விருது, அம்பேத்கர் விருது ஆகியவையும் அடக்கம்!

இந்நிலையில் மேற்கண்ட விருதுகளுக்கான நபர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரியார் விருது, அம்பேத்கர் விருதுக்கு பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து கேள்வியெழுப்பிய எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ”இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா?” என விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

தமிழக அரசு கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்த இரு விருதுகளுக்குமான நபர்களின் பெயரை வெளியிட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. பெரியார் விருது ‘செஞ்சி’ ராமச்சந்திரன் அவர்களுக்கும், அம்பேத்கர் விருது முனைவர் க அருச்சுனன் அவர்களுக்கும் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments