Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

பொங்கல் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...
, புதன், 15 ஜனவரி 2020 (11:21 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம் மற்றும் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். 
 
இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் போன்றோர் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதில், உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது.
 
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றும், இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும், அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... 5 பேர் காயம் !