நாளை முதல் வீடுகளுக்கே வரும் காய்கறிகள், பழங்கள்! – 5,722 வாகனங்கள் தயார்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (13:49 IST)
தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வரும் நிலையில் வீடுகளுக்கே நேரடியாக காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை முதல் தினசரி அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வீடுகளில் இருந்தபடியே கிடைக்க செய்ய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி வீதிகளிலேயே சென்று காய்கறிகளை விற்க மாநிலம் முழுவதும் 5,722 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த வாகனங்கள் நாளை முதல் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி விற்பனை மேற்கொள்ளும் என்றும், மக்கள் வீடுகளில் இருந்தபடியே இவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments