Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருளர்கள் பாம்பு பிடிக்க, விஷம் விற்க அனுமதி! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:48 IST)
தமிழகத்தில் இருளர் பழங்குடி மக்கள் பாம்புகள் பிடிக்க அனுமதி அளித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் முக்கியமான தொழிலாக பாம்பு பிடிக்கும் தொழில் உள்ளது. பாம்புகளை பிடித்து அவற்றிடமிருந்து விஷத்தை எடுத்து மருந்து நிறுவனங்களுக்கு விற்க ஆண்டுதோறும் அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான லைசென்ஸை வனத்துறை அவர்களுக்கு வழங்காத நிலையில் அவர்களது வாழ்வாதாரம் முடங்கியிருந்தது. இந்நிலையில் இருளர் பழங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிக்கவும், அவற்றின் விஷத்தை விற்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

விஷ முறிவு மருந்து தயாரிக்க நல்ல பாம்பு, கண்ணாடி வீரியன், கட்டு வீரியன், சுருட்டை உள்ளிட்ட பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில், இந்த பாம்புகளை பிடித்து விஷம் எடுப்பது இருளர்களின் முக்கிய தொழிலாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments